CINEMA
‘கொடை வள்ளல்’ தான் அதுக்காக இப்படியா..? பிரபல நடிகைக்கு 400 கோடி சொத்தை பரிசாக அளித்த எம்ஜிஆர்…
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனி ஆளாக ஆதிக்கம் செலுத்திய நடிகர் என்றால் அது எம்ஜிஆர் தான். தற்போது வரை அவரின் பெயர் நிலைத்திருக்க காரணம் அவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதராக இருந்தது தான். படங்களில் மட்டுமின்றி நிஜத்திலும் பலருக்கு எம்ஜிஆர் உதவி செய்துள்ளார். அதுமட்டுமல்ல அவருக்கு யாரையாவது பிடித்து விட்டாலோ அல்லது அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகி விட்டாலோ அவர்களுக்கு பரிசு கொடுப்பதை எம்ஜிஆர் வழக்கமாக கொண்டிருந்தார்.
அந்த வகையில் அவர் பிரபல நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா ஆகிய இருவருக்கும் போரூர் முதல் வளசரவாக்கம் வரை உள்ள இடங்களில் முக்கால்வாசி இடத்தை எம்ஜிஆர் பரிசாக வழங்கி உள்ளார். அந்த இடத்தை தான் தற்போது அம்பிகா மற்றும் ராதா இணைந்து ARS என்ற ஸ்டுடியோவை கட்டியுள்ளார்கள். இந்த ஸ்டுடியோ சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்று.
மேலும் தற்போது இந்த இடத்தின் மதிப்பு சுமார் 400 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த சமயத்தில் எம்ஜிஆர் பரிசாக கொடுத்த இடம் தற்போது கோடி கணக்கில் மதிப்பு பெற்றுள்ளது. அம்பிகா மற்றும் ராதாவிற்கு சென்னை தவிர பிற இடங்களில் குறிப்பாக கேரளாவில் அதிக சொத்துக்கள் உள்ளன. இருப்பினும் இவர்களுக்கு இந்த சொத்து தான் ஸ்பெஷலாம். எம்ஜிஆர் பரிசாக கொடுத்தால் இந்த சொத்தை அவர்கள் மிகவும் கவனமாக பதுகாத்து வருகிறார்கள்.