Categories: சினிமா

எம்.ஜி.ஆரை கிண்டலடித்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்! லெஃப்ட் ரைட் வாங்கிய புரட்சித் தலைவர்! பொன்மனச் செம்மல்ன்னா சும்மாவா?

Spread the love

தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வந்தவர். எம்.ஜி.ஆர் தனது தொடக்க காலகட்டத்தில் வறுமையில் வாடியவர். பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

அவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுப்போனது. அதன் பின் பல தடைகளை தாண்டி “ராஜகுமாரி” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின் அவரை தடுக்க எந்த சக்தியாலும் முடியவில்லை. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக மாறிப்போனார் எம்.ஜி.ஆர்.

அதன் பின் பல திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர், “நாடோடி மன்னன்”, “உலகம் சுற்றும் வாலிபன்”, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” போன்ற திரைப்படங்களை இயக்கி நடித்தார். இந்த நிலையில் ஒரு முறை ஒரு பத்திரிக்கையாளர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, “ரெண்டு மூணு படத்துல நடிச்சிட்டாலே ஒருவர் டைரக்டர் ஆகிவிடலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டாராம்.

அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர், “என்னை மனதில் வைத்துதான் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். என்னை அப்படி தவறாக எடை போடாதீர்கள். இயக்குனர் ராஜா சந்திரசேகரிடம் பல தொழில்நுணுக்கங்களை கற்றவன் நான். அதற்கு பிறகுதான் டைரக்சன் செய்யலாம் என்ற முடிவை நான் எடுத்தேன்” என்று கூறிய எம்.ஜி.ஆர்,

“டைரக்சன் என்பது எளிதான விஷயம் இல்லை. ஒரு படத்தின் கதையைப் பற்றியும் அந்த படத்தின் வசனங்களை பற்றியும் ஒரு கதாசிரியனுக்கு எவ்வளவு தெரியுமோ அதை விட அதிகமாக அந்த டைரக்டருக்கு தெரிந்திருக்க வேண்டும்” என்று திரைப்பட இயக்கம் சம்பந்தப்பட்ட பல நுணுக்கங்களை பகிர்ந்துகொண்டாராம்.

Arun

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

12 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago