தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகர் ஆக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கான தனி பாதையை உருவாக்கி அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க வந்த எம்ஜிஆர் பின்னாலில் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் பல மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். எம்ஜிஆரை தூக்கி வைத்து கொண்டாடினர்.
தன்னை ஆதரித்து வெற்றி நாயகனாக மாற்றிய தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் அனைவரிடம் நட்போடு பழகக் கூடியவர். தன் மீது அன்பு கொண்டவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் இரு துருவங்களாக பார்க்கப்பட்டனர். இருவருக்குள்ளும் ஒரு ஆத்மார்த்தமான நட்பு இருந்திருக்கிறது. இதைப்பற்றி சிவாஜிகணேசன் அவர்களே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். எம்ஜிஆர் அண்ணனுக்கும் எனக்கும் இடையில் இருப்பது ஒரு அதீத இனம் புரியாத ஓர் அன்பு. அவருக்கு எதுவானாலும் நான் வருவேன் எனக்கு எதுவானாலும் அவர் வருவார். எங்களது குடும்பமும் அப்படித்தான் நெருங்கி பழகியது.
எம்ஜிஆர் அவர்களின் தாயார் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். நாடகங்களில் நடிக்கும் போது எம்ஜிஆர் அண்ணன் உடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. சினிமாவிற்குள் வந்ததும் எங்கள் நெருக்கம் அதிகமானது. சொல்ல போனால் என்னுடைய திருமணத்தில் எம்ஜிஆர் அண்ணன் வந்து அனைவருக்கும் சாப்பாடு பரிமாறினார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் எதையுமே கண்டு கொள்ளவில்லை. திருமணத்தில் என்னை அமர வைத்து எனக்கு இலை போட்டு பரிமாறி என்னை சாப்பிட வைத்தார் எம்ஜிஆர் அண்ணன் என்று தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவாஜி கணேசன்.
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தேனி மேற்கு மாவட்டம் சின்னமனூரில் அக்கட்சியின்…
மத்திய கிழக்கில் பல மாதங்களாகத் நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், தற்போது மிகவும் கவலைக்கிடமான ஒரு…
மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…
தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…