தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னால் நடிகராக உயர்ந்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட்தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.
தன்னை ஆதரித்து வெற்றி நாயகனாக மாற்றிய தமிழக மக்களுக்கு சேவை வேண்டும் என்று அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் எம்ஜிஆர். எம் ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். தொண்டர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர். அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
எம்ஜிஆர் இறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஏழைத்தொண்டர் தனது மகளின் திருமணத்திற்காக எம்ஜாஆரின் உதவியை கேட்டிருந்தார். அடுத்த வருடம் திருமணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொல்லி இருந்தார் எம் ஜி ஆர். ஆனால் எதிர்பாராத விதமாக எம்ஜிஆர் இறந்து விடுகிறார். அந்த தொண்டரும் மன வருத்தத்தில் மகளின் திருமணத்தை நிறுத்தி விடுகிறார். ஆனால் எம்ஜிஆர் இறந்த பிறகு அவரது மனைவி ஜானகி அந்த தொண்டரை அழைத்து எம்.ஜி.ஆர் குறித்த தேதியில் உங்கள் மகளுக்கு திருமணம் நடக்கும் என்று கூறினார். மேலும் உங்கள் மகளுக்கு செய்ய வேண்டியது அனைத்தையும் டைரியில் அவர் குறிப்பிட்டு சென்றிருக்கிறார். அவர் கொடுத்த வாக்கை என்றும் செய்வதற்கு தவறியதில்லை. நானும் தவற விட மாட்டேன் என்று கூறி கல்யாணத்தை நடத்தி வைத்திருக்கிறார். இறந்த பிறகும் தொண்டருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி இருக்கிறார் எம்ஜிஆர்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…