Categories: சினிமா

பாட்டெழுத திணறிய மருதகாசி, கண்ணதாசன்.. தீர்த்து வைத்த பட்டுக்கோட்டையார்.. கிடைத்த மிகப்பெரிய சன்மானம்..

Spread the love

காலத்தால் அழியாத பல தத்துவ பாடல்களை நமக்கு தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சிறந்த தமிழ் அறிஞர், சீர்த்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியது தான் இவருடைய சிறப்பு. 19 வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர், உணர்ச்சிகளை தனது கவிதையில் கொட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசை கனவுகளையும், ஆவேசத்தையும், பாடல்களாக வடித்தவர். திரையுலகில் 180 பாடல்களையே எழுதினாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக அமைந்தவை.

அப்படி அவர் பாசவலை படத்திற்காக எழுதிய பாடல் கதையே ஒரு சுவாரஸியமான நிகழ்வு. 1956-ம் ஆண்டு எம்.கே.ராதா, வரலஷ்மி, எம்.என்.ராஜம் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாசவலை. ஏ.எஸ்.நாகராஜன் இயக்கத்தில், விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் உருவாகி இருந்தது இப்படம். இப்படத்தில் பாடல் எழுதும் பொறுப்பு கவிஞர் மருதகாசியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படி அவர் பாடல் எழுதும் போது, ஒரே ஒரு தத்துவப் பாடலை எழுதுவதற்கு மட்டும் அவரால் முடியவில்லை.

அதற்காக கண்ணதாசனை அழைத்துள்ளனர். அவரும் அந்தப் பாடலை எழுத எவ்வளவோ சிந்தனை செய்துள்ளார். ஆனால் இரண்டு பேராலும் அந்த தத்துவப் பாடலை எழுத முடியவில்லை. அடுத்து அந்த வாய்ப்பு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு செல்கிறது. அப்படி அவர் எழுதிய பாடல் தான், ”குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம், குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம், தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்” என்ற பாடல். இந்தப் பாடல் வரிகளை பார்த்து பிரம்மித்துப் போன மருதகாசி, அப்படத்திற்காக வாங்கிய சம்பளத்தை முழுவதுமாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கே வழங்கிவிட்டாராம்.

 

Archana

Recent Posts

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

2 minutes ago

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

9 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

13 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

18 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

19 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

20 minutes ago