Categories: CINEMA

பாட்டெழுத திணறிய மருதகாசி, கண்ணதாசன்.. தீர்த்து வைத்த பட்டுக்கோட்டையார்.. கிடைத்த மிகப்பெரிய சன்மானம்..

காலத்தால் அழியாத பல தத்துவ பாடல்களை நமக்கு தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சிறந்த தமிழ் அறிஞர், சீர்த்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியது தான் இவருடைய சிறப்பு. 19 வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர், உணர்ச்சிகளை தனது கவிதையில் கொட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசை கனவுகளையும், ஆவேசத்தையும், பாடல்களாக வடித்தவர். திரையுலகில் 180 பாடல்களையே எழுதினாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக அமைந்தவை.

அப்படி அவர் பாசவலை படத்திற்காக எழுதிய பாடல் கதையே ஒரு சுவாரஸியமான நிகழ்வு. 1956-ம் ஆண்டு எம்.கே.ராதா, வரலஷ்மி, எம்.என்.ராஜம் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாசவலை. ஏ.எஸ்.நாகராஜன் இயக்கத்தில், விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் உருவாகி இருந்தது இப்படம். இப்படத்தில் பாடல் எழுதும் பொறுப்பு கவிஞர் மருதகாசியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படி அவர் பாடல் எழுதும் போது, ஒரே ஒரு தத்துவப் பாடலை எழுதுவதற்கு மட்டும் அவரால் முடியவில்லை.

அதற்காக கண்ணதாசனை அழைத்துள்ளனர். அவரும் அந்தப் பாடலை எழுத எவ்வளவோ சிந்தனை செய்துள்ளார். ஆனால் இரண்டு பேராலும் அந்த தத்துவப் பாடலை எழுத முடியவில்லை. அடுத்து அந்த வாய்ப்பு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு செல்கிறது. அப்படி அவர் எழுதிய பாடல் தான், ”குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம், குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம், தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்” என்ற பாடல். இந்தப் பாடல் வரிகளை பார்த்து பிரம்மித்துப் போன மருதகாசி, அப்படத்திற்காக வாங்கிய சம்பளத்தை முழுவதுமாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கே வழங்கிவிட்டாராம்.

 

Archana
Archana

Recent Posts

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

23 mins ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

2 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

3 hours ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

3 hours ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

4 hours ago

அப்பாவின் கடைசி ஆசை.. ‘காலமும் நேரமும் தான் கை கொடுக்கணும்’.. விஜயகாந்த் மகன் உருக்கம்..!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் ஆசைப்பட்ட ஒரு படத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு காலமும் நேரம்தான்…

5 hours ago