விழுப்புரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப (IT) பிரிவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) உத்தரவிட்டுள்ளார். இதன்படி, விழுப்புரம் மாவட்ட IT விங் செயலாளர் S.கோகுல்ராஜ், இணைச் செயலாளர் SP பாலாஜி, புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் சத்தி பெரியதம்பி மற்றும் கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய IT விங் செயலாளர் SP சேதுபதி ஆகியோர் தங்களது கட்சிப் பொறுப்புகளில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து, சேலம் மண்டல IT விங் செயலாளர் பொறுப்பில் இருந்து KRD தினேஷ் பாலாஜியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் அடங்கிய…
தங்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளுக்காகத் தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யும் பெற்றோருக்கு, விதி சில நேரங்களில் மீளாத் துயரத்தையே…
ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் அரசியல் மற்றும் ராணுவ மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம்…
தேர்தல் பரப்புரையின் போது, வெற்றி பெற்றால் தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன் என்று தமிழக முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.…
திருச்சியில் தோழியைப் பார்ப்பதற்காகச் சென்ற 14 வயதுச் சிறுமி ஒருவருக்கு, ஓட்டுநர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்துப் பாலியல் தொல்லை…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பனையூர் பாபு அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். தவெகவின் (தமிழக வெற்றிக்…