விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பனையூர் பாபு அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். தவெகவின் (தமிழக வெற்றிக் கழகம்) அமைச்சரவையில் விசிக இடம்பெற்றதாக வெளியான தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் ஜூன் 7-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் அவர் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைய உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பனையூர் பாபு திமுகவில் இணையும் பட்சத்தில், அவருக்குக் கட்சியின் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, அவருக்கு மாவட்டச் செயலாளர் போன்ற ஒரு செல்வாக்கு மிக்க பொறுப்பை வழங்கி கௌரவிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. விசிகவின் முக்கியப் பிரமுகராக விளங்கிய பனையூர் பாபுவின் இந்த இடமாற்றம், வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் விசிக மற்றும் திமுக இடையேயான உறவிலும் சில முக்கிய நகர்வுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…
மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…
டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…
இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…
சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…
ஓமலூர் TVK வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு TVK MLA லட்சுமணன் வாக்காளர்களுக்கு ₹2,000 கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார்…