CINEMA
32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. அதிலும் மஞ்சு மேல் பாஸ் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் தமிழில் அதிக அளவு வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடிகர் விஜயமுத்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவை மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருந்தது மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் தான். இந்த திரைப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
இப்படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதில் நடித்திருந்த விஜயமுத்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது இந்த இடத்திற்கு வருவதற்கு மொத்தம் 32 வருடம் நான் கஷ்டப்பட்டு இருக்கின்றேன்.
உண்மையை சொல்லப் போனால் படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்க கூட என்னிடம் போதுமான அளவு காசில்லாமல் கஷ்டப்பட்டு இருக்கின்றேன். சினிமாவில் நடித்த கலைஞன் நான் வறுமையில் அந்த அளவுக்கு வாடி இருக்கின்றேன். இப்ப வந்திருக்கும் ஜி பி முத்து போன்ற பலருக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்து விடுகின்றது. அது மட்டும் இல்லாமல் அவர்கள் கேட்கும் சம்பளமும் கொடுக்கிறார்கள். எங்களைப் போன்று அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வருபவர்களை மதிக்க மாட்டார்கள்.
வாய்ப்பு கேட்டு போனால் எங்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்க மாட்டார்கள் என்று வருத்தத்துடன் பேசி இருந்தார். மேலும் தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்த நிலைமை என்று புரியவில்லை? தயவு செய்து இதை மாற்றுங்கள். புதிதாக வந்தவர்களுக்கு கொடும் வாய்ப்பில் எங்களுக்கும் கொஞ்சமாவது கொடுங்கள் என்று மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.