#image_title
தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை வாசுதேவ் மேனன் தாய் உமா. இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கௌதம், மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பிறகு அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய திரைப்படங்கள் முக்கியப் படங்களாக அமைந்தன. இவர் இயக்கும் படங்கள் எலலம் உயர் மத்திய தர வகுப்பு இளைஞர்களைப் பற்றிய கதை என்பதால் அந்த தரப்பு இளைஞர்களை வசீகரித்து அவர்களால் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மின்னலே திரைப்பட வாய்ப்பை தான் பெற்றது குறித்து அவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பேசியுள்ளார். ஒரு நேர்காணலில் “அப்போது மாதவன் நடித்த அலைபாயுதே திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அவரிடம் நான் மின்னலே கதையை சொன்னேன். அவர் என்னை இயக்குனர் மணிரத்னத்திடம் அழைத்துச் சென்று கதை சொல்ல சொன்னார்.
நான் மிகவும் மதிக்கும் மணிரத்னம் அவர்களைப் பார்த்ததும் பதற்றமாகிவிட்டேன். ஆனாலும் முழுக் கதையையும் அவரிடம் சொன்னேன். ஆனால் நான் சொன்னவிதம் அவரை வெகுவாகக் கவரவில்லை போல. அதே நேரத்தில்தான் மாதவனுக்கு என்னவளே என்ற திரைப்படமும் வந்துள்ளது. அந்த கதை மணிரத்னத்துக்கு பிடித்திருந்தது போல. அதனால் என்னவளே படத்தை முதலில் பண்ண சொல்லி மாதவனுக்கு அறிவுரை சொல்லியுள்ளார்.
அதனால் என்னவளே திரைப்படம் முதலில் தொடங்கியது. அந்த படம் ஷூட்டிங் செல்லும்போதே, மாதவனுக்கு மின்னலே திரைப்படத்தின் மேல் நம்பிக்கை இருந்ததால் அதைத் தொடங்கினோம். அந்த படமும் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் அந்த படத்தில் எனக்கு முழு திருப்தி இல்லை. நான் இப்போது பார்க்கையில் அந்த படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…
இன்று, ஏப்ரல் 22, 2026 அன்று, ஜோதிட உலகின் மிக முக்கிய நிகழ்வாக சனி பகவான் மீன ராசியில் 'உதயம்'…
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…