Categories: சினிமா

GVM-இன் ‘மின்னலே’ படத்தில் நடிக்க வேண்டாம் என மாதவனுக்கு அட்வைஸ் செய்த மணிரத்னம்.. ஏன் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை வாசுதேவ் மேனன் தாய் உமா. இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கௌதம், மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய திரைப்படங்கள் முக்கியப் படங்களாக அமைந்தன. இவர் இயக்கும் படங்கள் எலலம் உயர் மத்திய தர வகுப்பு இளைஞர்களைப் பற்றிய கதை என்பதால் அந்த தரப்பு இளைஞர்களை வசீகரித்து அவர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் மின்னலே திரைப்பட வாய்ப்பை தான் பெற்றது குறித்து அவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பேசியுள்ளார். ஒரு நேர்காணலில் “அப்போது மாதவன் நடித்த அலைபாயுதே திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அவரிடம் நான் மின்னலே கதையை சொன்னேன். அவர் என்னை இயக்குனர் மணிரத்னத்திடம் அழைத்துச்  சென்று கதை சொல்ல சொன்னார்.

நான் மிகவும் மதிக்கும் மணிரத்னம் அவர்களைப் பார்த்ததும் பதற்றமாகிவிட்டேன். ஆனாலும் முழுக் கதையையும் அவரிடம் சொன்னேன். ஆனால் நான் சொன்னவிதம் அவரை வெகுவாகக் கவரவில்லை போல. அதே நேரத்தில்தான் மாதவனுக்கு என்னவளே என்ற திரைப்படமும் வந்துள்ளது. அந்த கதை மணிரத்னத்துக்கு பிடித்திருந்தது போல. அதனால் என்னவளே படத்தை முதலில் பண்ண சொல்லி மாதவனுக்கு அறிவுரை சொல்லியுள்ளார்.

அதனால் என்னவளே திரைப்படம் முதலில் தொடங்கியது. அந்த படம் ஷூட்டிங் செல்லும்போதே, மாதவனுக்கு மின்னலே திரைப்படத்தின் மேல் நம்பிக்கை இருந்ததால் அதைத் தொடங்கினோம். அந்த படமும் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் அந்த படத்தில் எனக்கு முழு திருப்தி இல்லை. நான் இப்போது பார்க்கையில் அந்த படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

7 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

7 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

8 மணத்தியாலங்கள் ago