#image_title
ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தி பாடல்களைதான் அதிகமாக கேட்டு வந்தனர். அந்த போக்கை முற்றிலுமாக மாற்றியவர் இசைஞானி இளையராஜா. அதன் பிறகு அடுத்த தலைமுறை இசையமைப்பாளராக வந்த ஏ ஆர் ரஹ்மான் வட இந்திய ரசிகர்களையும் தமிழ் பாடல் கேட்கவைத்தார் என்று சொல்லப்படுவது உண்டு.
அப்படி 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகாமனார் ஏ ஆர் ரஹ்மான். முதல் படத்துக்கே தேசிய விருது பெற்றார். அதன் பிறகு அவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. ரஹ்மானை மிகச்சிறப்பாக பயன்படுத்தி தங்கள் திரைப்படங்களை தமிழை தாண்டியும் பல மொழிகளில் வெற்றிப் படங்களாக ஆக்கிய இயக்குனர்கள் மணிரதனமும், ஷங்கரும்தான்.
ஷங்கரின் முதல் படமான ஜெண்டில்மேன் படத்துக்கு சூப்பர் ஹிட் ஆல்பத்தைக் கொடுத்த ரஹ்மான், அடுத்து காதலன் திரைப்படத்துக்கும் இணைந்து பணியாற்றினர். காதலன் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் அமைந்தன.
இந்நிலையில் காதலன் படத்தின் ரிலீஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக படத்தின் ஒட்டுமொத்த பின்னணி இசையும் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காணாமல் போய்விட்டதாம். இதனால் படக்குழுவினர் அனைவரும் பதற்றமாகியுள்ளனர். ஆனால் ஏ ஆர் ரஹ்மான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக தொழுகைக்கு சென்றுவிட்டாராம்.
தொழுகையை முடித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து பின்னணி இசையை அமைக்க தொடங்கினாராம். எந்த தொய்வும் இல்லாமல் ஒரு நாளுக்குள்ளாகவே மொத்த படத்துக்குமான பின்னணி இசையை அமைத்து முடித்துவிட்டாராம். அதன் பின்னர்தான் படம் அறிவிக்கப்பட்ட தேதியில் எந்த தாமதமும் ரிலீஸ் ஆனதாம்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் அஸ்வினி…
திரையுலகில் ஒரு நடிகரின் சந்தை மதிப்பைத் தீர்மானிப்பதில் அவர் வாங்கும் சம்பளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நடிகர் விஜய் தனது…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது மகளின் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை…
ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…