தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சு அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் நாயுடு சமூகத்தினரின் ஆதரவைக் கோரிய அவர், மத்தியில் ஆளும் அரசுடன் இணைந்து செயல்படும் மாநிலங்களே வளர்ச்சியடைவதாகத் தெரிவித்தார். மேலும், மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பெண்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது மேடையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் அருகிலேயே இருந்தனர். அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தாமல் வெறும் இலவசங்களை மட்டும் அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று கடுமையாக விமர்சித்தார். அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவசத் திட்டங்களை முன்னிறுத்தியுள்ள நிலையில், கூட்டணியில் இருக்கும் ஒரு தலைவரே அதற்கு எதிராகப் பேசியது அக்கட்சியினரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட திமுகவினர், அதிமுகவின் இலவச அரசியலை அவர்களது கூட்டணிக் கட்சிகளே ஏற்கவில்லை எனச் சாடி வருகின்றனர்.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து…
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், பிதாபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் தம்பதி ஒருவர், தங்களது இரண்டு குழந்தைகளுடன்…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கொடூர சம்பவம்…
ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பனுடன் இணைந்து தனது சொந்த தாத்தாவை கொடூரமாக படுகொலை செய்த…
பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக் தாம் திருத்தலத்தில், சவன் மாத சிறப்பு வழிபாட்டிற்காக இன்று பெருமளவில் பக்தர்கள் திரண்டனர்.…