செவிலியராக வேலை பார்த்த மனைவி… துபாயில் இருந்து வந்த கணவன்… கதவைத் திறந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் சம்பவம்…!

Spread the love

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவன் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த தர்மசீலன் (30) என்பவர் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மஞ்சு செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் இவர்கள் இருவரும் மஞ்சுவின் தந்தையான பெரியசாமியின் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மசீலன் துபாயிலிருந்து இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் தர்மசீலன் மற்றும் மஞ்சுவின் அறை கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெரியசாமி அவர்களுடைய அறைக்கு சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கதறி அழுதபடி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மஞ்சுவின் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது. மேலும் தர்மசீலன் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் தர்மசீலன் தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

நிமிஷத்தில் மாறிய காட்சி… “ஈரான் காலி!” – டிரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு… அடுத்த நொடியே பதறிப்போன உலக நாடுகள்…!

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…

35 seconds ago

“அம்மா எப்போ வருவாங்க?” – 4 வயது மகள் கேட்ட கேள்வி.. குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் தாய்க்கு நேர்ந்த சோகம்…!

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…

7 minutes ago

கடலில் நடுவே நடந்த பயங்கரம்… இந்தியா வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்… நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்கள்…. அடுத்த பரபரப்பு…!

ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…

11 minutes ago

“டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்”… செல்வப்பெருந்தகைக்கு கல்தா? – அடுத்த தலைவர் இவர்தான்…. ராகுல் காந்தி எடுத்த அந்த ஒரு முடிவு…!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…

16 minutes ago

“வினாடிக்கு ஒரு கால்… பெண் ஊழியருக்கு ‘டெக்னிக்கல்’ டார்ச்சர்”… டிசிஎஸ்-ஸில் அதிர்ச்சி… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மை …!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

19 minutes ago

யார் அந்த கருப்பு ஆடு?…”ஜெயிச்சா மந்திரி.. தோத்தா காலி!”… நள்ளிரவில் பறந்த “கடைசி” போன் கால்… மா.செ.க்களுக்கு எடப்பாடி வைத்த மரண செக்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…

25 minutes ago