கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவன் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த தர்மசீலன் (30) என்பவர் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மஞ்சு செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் இவர்கள் இருவரும் மஞ்சுவின் தந்தையான பெரியசாமியின் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மசீலன் துபாயிலிருந்து இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் தர்மசீலன் மற்றும் மஞ்சுவின் அறை கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெரியசாமி அவர்களுடைய அறைக்கு சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கதறி அழுதபடி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மஞ்சுவின் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது. மேலும் தர்மசீலன் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் தர்மசீலன் தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…
ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…