நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. மின் கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் அடித்துக் கொலை… காதலியைப் பார்க்க வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்….!

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருட்டுச் சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலமு மாவட்டம் முர்மா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான பவன் ராம் என்பவர், அண்டை கிராமமான டெலியாகிக்குச் சென்றபோது அங்கிருந்த கிராம மக்களால் பிடிக்கப்பட்டார். ஒரு வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியைத் திருட முயன்றதாகக் கூறி, அங்கிருந்தவர்கள் அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பவன் ராமை மீட்ட போலீசார், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நடத்திய இந்த வன்முறைச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பவன் ராம் தனது காதலியைச் சந்திக்க அந்த கிராமத்திற்கு வந்திருக்கலாம் என்றும், அதைக் கண்ட கிராமத்தினர் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, திருட்டுப் பட்டம் கட்டி நாடகமாடுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றத்தை மறைக்க திருட்டுச் சம்பவத்தை கிராமத்தினர் திசைதிருப்ப முயன்றனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

11 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

29 minutes ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

42 minutes ago

பெங்களூர் காப்பகத்தில் பயங்கரம்… கழிப்பறையை கண்டாலே அலறும் 2 வயது குழந்தை… வீடியோவில் சிக்கிய கொடூரம்…!

பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…

53 minutes ago

தவெக-வில் இருந்து வந்த செம ஆஃபர்…. அதிமுகவில் இருந்து விலகும் Ex அமைச்சர் வளர்மதி?…. சலசலப்பை அடக்கிய அப்சரா ரெட்டியின் ட்வீட்…!

முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…

59 minutes ago

என்னது,…”அவங்க மூணு பேரும் கூட இருக்கணுமா ?…” யாருமே எதிர்பார்க்காத டிரம்பின் அந்த ‘ஒரே ஒரு’ ஆசை…!

அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…

1 மணத்தியாலம் ago