மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? ராஜ்பவனுக்குச் சென்று எனது ராஜினாமா கடிதத்தை வழங்க மாட்டேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தத் தோல்வி மக்களின் தீர்ப்பு அல்ல என்றும், திட்டமிடப்பட்ட சதி மற்றும் ஜனநாயகப் படுகொலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுமார் 100 தொகுதிகள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டதாகக் கூறிய மம்தா, தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாகவும், பாஜகவை விட தேர்தல் ஆணையமே தங்களுக்குப் பெரிய எதிரியாக இருந்ததாகவும் சாடினார். மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்தியப் படை வீரர்கள் குண்டர்களைப் போல நடந்துகொண்டதாகவும், சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டு முறைகேடுகள் நடந்ததாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்துத் தான் தாக்கப்பட்டதாகவும், வயிற்றிலும் முதுகிலும் எட்டி உதைக்கப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி மிகவும் வேதனையுடன் தெரிவித்தார். ஒரு பெண்ணிடம் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்தத் தோல்வி குறித்து ஆராய ஐந்து எம்பிக்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைக்க உள்ளதாகவும் கூறினார். இதற்கிடையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகச் சட்டமன்றத்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (மே 7) தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ள நிலையில், திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் தனது 'எக்ஸ்' (X)…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக ஆட்சியை இழந்ததோடு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த செய்தி கேட்டு…
பிரபல முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் (IBM), தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்குத் தகுதியான…