தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக ஆட்சியை இழந்ததோடு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த செய்தி கேட்டு திமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (56), நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். தீவிர திமுக விசுவாசியான இவர், தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த மே 4-ம் தேதி அன்று தனது கட்சி சந்தித்த எதிர்பாராத தோல்வியைக் கண்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி திடீரென மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியில் மயக்கமடைந்த பன்னீர்செல்வத்தை அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அளவுக்கடந்த பற்றால் தனது உயிரையே இழந்த நிர்வாகியின் இந்தத் துயரச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையேயும் கட்சித் தொண்டர்களிடையேயும் பெரும் அதிர்வலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகச் சட்டமன்றத்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (மே 7) தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ள நிலையில், திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் தனது 'எக்ஸ்' (X)…
பிரபல முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் (IBM), தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்குத் தகுதியான…