மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மம்மூட்டி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் கலைமீது தீராத ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு அனுபவங்கள் பாலி சிக்கல் என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு 1976 ஆம் ஆண்டு எம்டி வாசுதேவன் நாயரின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் தேவலோகம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மம்முட்டியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். மலையாளத் திரை உலகில் இவர்தான் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த ஹீரோ. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் வெளியான மௌனம் சம்மதம் மற்றும் அழகன் ஆகிய திரைப்படங்கள் தமிழில் மெகா ஹிட் கொடுத்தன. அதனைப் போலவே தமிழில் இவர் நடித்த மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் ஆனந்தம் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது மலையாள திரை உலகில் முன்னணி சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் மம்முட்டிக்கு கேன்சர் என அண்மையில் செய்தி பரவியது. ரசிகர்களை அதிர்ச்சி கொள்ளாக்கிய இந்தச் செய்தியில் உண்மையில்லை என்று மம்முட்டி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் மம்முட்டி உடலில் பிரச்சனை இருப்பது உண்மைதான் என அவரது நண்பர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று மம்முட்டி குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…
குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…