#image_title
நாதஸ்வரம் சீரியல் மூலமாக பிரபலமான நடிகை ஸ்ரீத்திகா இரண்டாவதாக ஆர்யன் என்பவரை திருமணம் செய்திருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நாதஸ்வரம் சீரியல் மூலமாக மிகவும் பிரபலமான நடிகையாக மாறியவர் ஸ்ரீத்திகா. திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. மேலும் நடிகை ஸ்ரீத்திகா தனது எதார்த்தமான நடிப்பு மூலமாக ரசிகர்களை பெரும் அளவு கவர்ந்தார். அதுமட்டுமில்லாமல் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
வெள்ளித்திறையில் திரைப்படங்கள் பெரிய அளவு கை கொடுக்காத காரணத்தினால் மீண்டும் சின்னத்திரையிலேயே நடிக்க தொடங்கி விட்டார். திருமுருகன் இயக்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று சீரியல்களில் நடித்திருக்கின்றார். நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாணப்பரிசு போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி என்ற சீரியலில் நடித்திருந்தார்.
திருமுருகன் இயக்கத்தில் நடித்து வந்த போது இவருக்கும் திருமுருகனுக்கும் இடையே காதல் இருப்பதாக பல வதந்திகள் வெளிவந்தது .அதனை அவரே பொய் என்று மறுத்திருந்தார். பின்னர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே சனீஸ் என்பவரை கிறிஸ்டியன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
அதைத்தொடர்ந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிறந்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் சீரியலில் நடித்து வந்த ஸ்ரீத்திகா, மகராசி என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த ஆர்யன் என்பவரை தான் தற்போது கரம் பிடித்திருக்கின்றார். நடிகர் ஆர்யன் ஏற்கனவே நிவேதிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரும் மூன்று வருடங்களுக்கு பின்பு விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகராசி சீரியலில் ஆரியன் நிவேதிகா ஸ்ரீத்திகா மூவரும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்து வந்த நிலையில் ஆரியன் நிவேதிகா பிரிவுக்கு பிறகு தற்போது ஸ்ரீத்திகா ஆரியனை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்.
மேலும் இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீத்திகா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றார். இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்ட நிலையில் தற்போது இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று கூறி இருக்கின்றார்.
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…
2026 ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள்…
பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகளை ஒரு இளம்பெண் தனது சமயோசித புத்தியால் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலராலேயே…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…