பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகளை ஒரு இளம்பெண் தனது சமயோசித புத்தியால் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது ஆக்டிவா (Activa) இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வந்துள்ளார். ஊழியரிடம் “டேங்க் முழுவதையும் நிரப்புங்கள்” என்று அமைதியாகக் கூறிவிட்டு கவனித்துள்ளார். பெட்ரோல் நிரப்பப்பட்ட பின், மீட்டரில் 6 லிட்டர் என்று காட்டியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், ஆக்டிவா வாகனத்தின் மொத்தக் கொள்ளளவே 5.3 லிட்டர்தான் எனும் போது, மீட்டரில் 6 லிட்டர் காட்டியது பெரும் மோசடியை உணர்த்தியது.
உடனடியாக அந்தப் பெண் ஊழியரைத் தட்டிக்கேட்டார். “எனது வாகனத்தின் டேங்க் கொள்ளளவே 5.3 லிட்டர்தான், அதிலும் ஏற்கனவே ஒரு லிட்டர் பெட்ரோல் இருந்தது. அப்படியிருக்க எப்படி நீங்கள் 6 லிட்டர் பிடிக்க முடியும்?” என்று ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டதும் பதற்றமடைந்த ஊழியர், முறையான பதில் சொல்லாமல் அந்தப் பெண்ணிடம் மிகவும் மாரியாதைக் குறைவாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டார். ஆனால், அந்தப் பெண் பயந்து பின்வாங்காமல் உடனடியாக மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் பெட்ரோல் அளவு சரிபார்க்கப்பட்டது. விசாரணையில் அந்த பெட்ரோல் பங்கில் ரகசியமாக மோசடி நடப்பது ஊர்ஜிதமானது. இதன் விளைவாக, மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும், அந்த பெட்ரோல் பங்கிற்கு 15 நாட்கள் சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். விழிப்புணர்வுடன் இருந்த அந்தப் பெண்ணின் செயலால் ஒரு பெரிய பெட்ரோல் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…
2026 ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள்…