பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில்… மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்த மாமனார்.., 4 மாதங்களுக்குப் பின் அம்பலமான பகீர் உண்மை..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள பகீர் சம்பவம் நான்கு மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யதேந்திரா மற்றும் தனு ஆகிய இருவரும் காதலித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், தம்பதிக்கு இடையே ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக, தனு கோபித்துக் கொண்டு தனது தந்தை மகேந்திர பாலின் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனுவின் பிறந்தநாள் வந்தபோது, மனைவியைச் சமாதானப்படுத்தவும் பிறந்தநாளைக் கொண்டாடவும் யதேந்திரா தனது மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வந்த மருமகனை மாமனார் மகேந்திர பால் இன்முகத்தோடு வரவேற்றுள்ளார். அனைவரும் சேர்ந்து பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். அதன் பிறகு, மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார் மாமனார். இந்தச் சம்பவத்தில் மனைவியும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

யதேந்திராவின் மர்ம மரணம் குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் உடற்கூறாய்வு செய்தனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு தற்போது வந்துள்ள தடய அறிவியல் (FSL) ஆய்வறிக்கையில், யதேந்திரா விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனு மற்றும் அவரது தந்தை மகேந்திர பால் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டமே ஒரு மனிதனின் மரணப் பொறியாக மாறியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

17 minutes ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

33 minutes ago

“ஆம்புலன்ஸ் கூட கிடைக்கல” பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்… தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற கிராமத்தினர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…

46 minutes ago

“லைக்ஸுக்காக இப்படியா?… வந்தே பாரத் கழிவறையில் பாம்பா?… பதறிய ஊழியர்கள்!.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… பயணிகளை அலறவிட்ட வீடியோ”…!!!

வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…

60 minutes ago

“தோனியின் சாதனையை முறியடிப்பதே என் லட்சியம்… 5 கோப்பைகள் தான் டார்கெட்!”… ஐபிஎல் களத்தில் அதிரடி கிளப்பும் கே.எல். ராகுல்…!!!

2026 ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள்…

1 மணத்தியாலம் ago