இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா. சினிமாவிற்காக ரக்ஷிதா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இவருடைய அப்பா அம்மா இருவருமே சினிமா பின்புலம் கொண்டவர்கள் என்பதால் இவரும் சினிமா துறையில் எளிதாக நுழைந்து விட்டார். கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் புனித் ராஜ்குமாரின் இயக்கத்தில் அப்பு என்ற கன்னட திரைப்படம் மூலமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு 2003 ஆம் ஆண்டு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளியான ‘தம்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த படத்தில் வந்த “சாணக்யா சாணக்கியா” என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர்.
இந்தப் படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஆனால் விஜய்க்கு ஜோடியாக இவர் தான் நடித்தார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் தமிழ் மொழி படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கில் மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், நாகார்ஜுனா மற்றும் ரவி தேஜா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் அரசியலில் குதித்தார்.
இதன் பிறகு பாஜக கட்சியில் இணைந்தார். பின்னர் கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு குட் பாய் சொல்லிவிட்டார். பிறகு இவர் குடும்ப வாழ்க்கையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு சூர்யா என்ற ஒரு மகனும் உள்ளார். இப்படியான நிலையில் தற்போது இவர் குண்டாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ளார். சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் மதுரப்பட நடிகையா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்களது முதல் மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்கள்…
ஜாகீராபாத் நகரில் உள்ள ஜெய் பவானி நகைக்கடையில், சனிக்கிழமை நான்கு பெண்கள் புர்கா அணிந்து வாடிக்கையாளர்களைப் போல் நுழைந்துள்ளனர். அவர்களுடன்…
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில், ஜேசிபி ஓட்டுநருக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஓட்டுநர் உரிமையாளரின்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பஹராம்பூர் பகுதியில், மதுபானக் கடைக்கு வெளியே இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கழிவுநீர்…
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் டேவ் மக்மாஃஹான், செய்தி அறையில் தனது மேலதிகாரியுடன் ஏற்பட்ட காரசாரமான…
உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராமநகரின் கர்ஜியா பகுதியில், ஆகஸ்ட் 17 திங்கள்கிழமை பட்டப்பகலில் புலி ஒன்று குடியிருப்பு…