தமிழகத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய தொகையை நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய அதிநவீனத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்துடன் கூடிய ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரத்தில் காலி மதுபாட்டிலை ஒப்படைப்பதன் மூலம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கு உடனடியாக ₹10 வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சோதனை முறையில் தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சோதனை ஓட்டத்தின் போது பயனாளிகளிடம் பெறப்படும் கருத்துக்கள் மற்றும் செயல்முறை விளக்கங்களின் அடிப்படையில், இந்த AI பாட்டில் சேகரிப்பு இயந்திரங்கள் படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளன. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும், பாட்டில்களை மறுசுழற்சி செய்யவும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…