Categories: சினிமா

‘என்னால் நாடகத்த விட்டுட்டு சினிமாவுக்கு வர முடியாது’… ரத்தக் கண்ணீர் படத்தில் நடிக்க இப்படியெல்லாம் கண்டீஷன் போட்டாரா M R ராதா?

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் என்றால் அது சிவாஜிதான் என்று இப்போதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சிவாஜியே நடிப்பில் தன்னுடைய முன்னோடியாக, ஆதர்சமாக நினைத்தவர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியரான ராதா, 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.

அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா.

ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர். எம் ஆர்  ராதாவுக்கு திருப்புமுனையாக அமைந்த ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில் அவர் நடிக்க போட்ட கண்டீஷன்களைப் பற்றி பார்ப்போம்.

#image_title

ரத்தக் கண்ணீர் நாடகம் வெற்றிகரமாக ஓடியதும் பெருமாள் முதலியார் ( காங்கிரஸ் காரர்,  கடவுள் பக்தி கொண்டவர்) அதை திரைப்படமாக எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஏற்கனவே சினிமா மேல் விரக்தியில் இருந்த ராதா, பல கண்டீஷன்களைப் போட்டு அதற்கு சம்மதம் என்றால் நான் நடிக்கிறேன் என்றாராம்.

அப்படி அவர் போட்ட கண்டீஷன்கள்

  • நான் நாடகத்தில் நடித்து முடித்துவிட்டு ஓய்வாக இருக்கும்போதுதான் ஷூட்டிங்கில் கலந்துகொள்வேன். என்னால் சினிமாவுக்காக நாடகத்தை விட முடியாது.
  • ரத்தக் கண்ணீர் படத்தில் கடவுளை கேலி செய்து வரும் வசனங்களை எல்லாம் அப்படியே படமாக்க வேண்டும்.
  • அதே போல கதாநாயகன் தன் மனைவியை நண்பனுக்கு திருமணம் செய்துவைத்து விட்டு உயிர்விடும் காட்சியையும் அப்படியே படமாக்க வேண்டும்.
  • எனக்கு சம்பளமாக ஒன்னேகால் லட்சம் ரூபாய் வழங்கவேண்டும். (அப்போது கேபி சுந்தரம்மாள் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார்)

எனக் கூறியுள்ளார். இதற்கெல்லாம் ஒத்துக்கொண்டு அவரை வைத்து அந்த படத்தை எடுத்து ரிலீஸ் செய்து பெரும் வெற்றியைப் பெறவைத்துள்ளனர் படக்குழுவினர்.

vinoth

Recent Posts

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

2 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

4 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

16 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

19 minutes ago

திருவள்ளுவருக்கு மீண்டும் காவி பூசுறாங்க… அதை கேட்க வக்கில்லை… விஜய் அரசை கிழித்துத் தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்..!!

தமிழகத்தில் தவெகவுக்குத் தெரியாமல் வாக்களித்துவிட்டோமோ என்று ஓட்டுப்போட்ட மக்களே நினைக்கும் அளவுக்குத்தான் இன்றைய ‘சோபா மாடல்’ ஆட்சி உள்ளதாக எதிர்க்கட்சித்…

23 minutes ago

சற்றுமுன்: டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்… தமிழக அரசின் முக்கிய முடிவு..!!

தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதியுடன் பழைய டாஸ்மாக் பார்களின் டெண்டர்கள் முடிவடைய உள்ள நிலையில், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல அதிரடி…

26 minutes ago