திருவள்ளூர் மாவட்டம் தாதுக்கான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பார்வதி, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கணவர் மற்றும் பிள்ளைகள் இன்றித் தனியாக வசித்து வருகிறார். இவரை இவரது அக்கா மற்றும் அண்ணன் பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று விடியற்காலை 3 மணி அளவில் ஏதோ சத்தம் கேட்டு மூதாட்டி வெளியே வந்து பார்த்தபோது, குடிபோதையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டை நோக்கி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக வீட்டிற்குள் சென்று கதவை மூட முயன்றபோதும், அந்த வாலிபர் மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அவரைப் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அந்த இக்கட்டான சூழலிலும் சற்றும் மனம்பதறாத 80 வயது மூதாட்டி, தான் நடப்பதற்காகப் பயன்படுத்தும் ஊன்றுகட்டையை (கைத்தடி) எடுத்து அந்த வாலிபரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். மூதாட்டியின் அதிரடித் தாக்குதலால் வலி தாங்க முடியாமல் அலறியடித்துக் கொண்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். அவ்வாறு ஓடும்போது அவசரக் கலக்கத்தில் அவரது செல்போன் கீழே விழுந்ததையும் கவனிக்காமல் ஓடித் தலைமறைவானார். உடனே மூதாட்டி தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தார். கீழே விழுந்த செல்போனை எடுப்பதற்காக அந்த வாலிபர் மீண்டும் மூதாட்டியின் வீட்டிற்கு வருவார் என்பதை உணர்ந்த உறவினர்கள், வீட்டிற்குள் ரகசியமாக மறைந்திருந்து, அங்கு வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் காவல் ஆய்வாளர் தாமோதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலை கிராமத்தைச் சேர்ந்த பாளையம் என்பவரின் மகனான குமரேசன் (வயது 35) என்பதும், பெயிண்டராக வேலை செய்யும் இவர் கடும் போதையில் மூதாட்டியிடம் அத்துமீறியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டி, துணிச்சலுடன் வாலிபரைத் தாக்கித் தன்னைத் தற்காத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…
தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…