கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப் பார்த்த த.வெ.க நிர்வாகி.. ஜன்னல் வழியாக அத்துமீறிய சம்பவம்.. காஞ்சிபுரத்தை உலுக்கிய விவகாரம்..!!!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தினமும் காலை 7 மணியளவில் குளித்துவிட்டு கல்லூரிக்குத் தயாராவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேபோல நேற்று காலையும் அந்த இளம்பெண் கல்லூரிக்குச் செல்வதற்காகக் குளித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்ளூர் நிர்வாகியான தியாகு (வயது 32) என்பவர் கழிவறை ஜன்னல் வழியாக அத்துமீறி எட்டிப் பார்த்துள்ளார். இதனை எதிர்பாராமல் கவனித்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், சற்றும் தாமதிக்காமல் வெளியே வந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் பெற்றோரின் உதவியுடன் மணிமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். தவெக நிர்வாகி தியாகு தான் குளிப்பதைத் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததாகவும், அதை அவர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருப்பாரோ என்ற பலத்த சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட மணிமங்கலம் போலீசார், அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த தியாகுவை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். முதலில் அக்குற்றச்சாட்டை மறுத்து மழுப்பிய தியாகு, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்ததை ஒப்புக்கொண்டார்.

இளம்பெண்ணின் சந்தேகத்தின் பேரில் தியாகுவின் செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், அதில் வீடியோ எதுவும் பதிவு செய்யப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டுள்ளதா (Delete) என்பதைக் கண்டறிய சைபர் க்ரைம் ரெக்கவரி பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தியாகு இதுபோல ஏற்கனவே வேறு பெண்களிடமும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தியாகு மீது வழக்குப் பதிவு செய்த மணிமங்கலம் போலீசார், அவரை நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தவெக நிர்வாகி ஒருவர் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த விவகாரம் மணிமங்கலம் பகுதி மக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…

10 minutes ago

ஸ்கூல் லஞ்ச் பிரேக்கில் காரில் உல்லாசம்.. “ஆசிரியரை குஷிப்படுத்தவே ஆபாச படங்கள் அனுப்பினேன்..” 17 வயது மாணவன் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…

16 minutes ago

BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…

33 minutes ago

“ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் கள்ள காதல்”… 2016-ல் கணவனுக்கு நேர்ந்த அதே கதி… 2026-ல் கள்ளக்காதலியின் உடலை எரித்த காதலன்… பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…

39 minutes ago

கண்ணீர் விட்டு கதறி உயிரை விட்ட அதிமுக நிர்வாகி… பதறியடித்து ஓடிவந்த எடப்பாடி பழனிசாமி… கலங்க வைக்கும் வீடியோ…!

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…

45 minutes ago

“கோடிகளை கொட்டி பதவி வாங்கினாங்க”… ஸ்டாலின் – எடப்பாடி ரகசிய கூட்டணி?.. உடைத்து நொறுக்கிய தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்…!

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

50 minutes ago