#image_title
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு ஹெல்த் ஆன் ஹங்கர் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சர்வதேச உணவு நாளை முன்னிட்டு பசித்தவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று உணவு வழங்குகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தொண்டு நிறுவனத்தினர் உணவு வழங்குகின்றனர்.
அக்டோபர் 14-ஆம் தேதி (இன்று) உலக உணவு நாளை முன்னிட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மொய் விருந்து என்ற உணவு வழங்கும் பயணத்தை நடத்தினர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 5000 நபர்களுக்கு பிரியாணி கொடுக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் இது போன்ற மக்கள் நலத்திட்டங்களில் கலந்து கொள்ளும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் விளம்பர தூதுவராக இருக்கிறார். இந்த ஆண்டு மொய் விருந்து பயணத்தில் அவர் கலந்து கொண்டார்.
அவருடன் பிரபல இயக்குனரான லோகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுக்கும் இந்த நிகழ்ச்சியை இருவரும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…