#image_title
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு ஹெல்த் ஆன் ஹங்கர் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சர்வதேச உணவு நாளை முன்னிட்டு பசித்தவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று உணவு வழங்குகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தொண்டு நிறுவனத்தினர் உணவு வழங்குகின்றனர்.
அக்டோபர் 14-ஆம் தேதி (இன்று) உலக உணவு நாளை முன்னிட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மொய் விருந்து என்ற உணவு வழங்கும் பயணத்தை நடத்தினர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 5000 நபர்களுக்கு பிரியாணி கொடுக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் இது போன்ற மக்கள் நலத்திட்டங்களில் கலந்து கொள்ளும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் விளம்பர தூதுவராக இருக்கிறார். இந்த ஆண்டு மொய் விருந்து பயணத்தில் அவர் கலந்து கொண்டார்.
அவருடன் பிரபல இயக்குனரான லோகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுக்கும் இந்த நிகழ்ச்சியை இருவரும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…