தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது நடிப்பில் தற்பொழுது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு, சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் தனது அம்மாவிற்காக கோவில் ஒன்றை கட்டி இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்த சாய்பாபா கோவிலை சென்னை கொரட்டூரில் 8 கிரவுண்ட் பரப்பளவில் இடம் ஒதுக்கி பிரம்மாண்டமான முறையில் நடிகர் விஜய் கட்டியுள்ளார். இந்த கோவிலை கட்டுவதற்கு காரணம் அவரது அம்மா தான். அவரே ஒரு பேட்டியில் தன் மகன் விஜயிடம், ‘ உன்னுடைய சொந்த நிலத்தில் எனக்காக இந்த கோவிலைக் கட்டிக் கொடு’ என்று கூறியதாக சொல்லியிருந்தார்.
தற்பொழுது நடிகர் விஜய் தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற கட்டிய இந்த சாய்பாபா கோவிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்றுள்ளார். அங்கு அவர் நடிகர் விஜயின் அம்மா ஷோபா அவர்களுடன் இணைந்து சாய்பாபாவை தரிசனம் செய்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்த, அவர் அந்த பதிவில்,
‘அனைவருக்கும் வணக்கம். இன்று நண்பன் விஜயின் சாய்பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்றேன். நான் என் ராகவேந்திரர் ஸ்வாமி கோவிலை கட்டியபோது, எங்கள் கோவிலில் ஒரு பாடலை பாடினார். இன்று அவர்களின் கோவிலுக்கு சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கோவிலை கட்டிய நண்பன் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் தூய்மையான தெய்வீக மற்றும் இனிமையான அதிர்வுகளை உணர்ந்தேன். அனைவரும் கோவிலுக்குச் சென்று அருள் பெறுமாறு பரிந்துரைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram