நடிகர் நெப்போலியன் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துறைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள். இவர் 5வது மகனாக பிறந்தார். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 1991ல் பாரதிராஜவால் புது ‘நெல்லு புது நாத்து’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதன்பின்னர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார் நெப்போலியன். சின்ன தாயி, இது நம்ம பூமி, ஊர் மரியாதை, பங்காளி, தர்ம சீலன், மறவன், எஜமான், எட்டுப்பட்டி ராசா, சுயம்வரம் அய்யா என பல படங்களில் நடித்தார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறார் நெப்போலியன். திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார்.
அழகிரியின் விசுவாசியாக ஒருந்த நெப்போலியன், 2014ல் திமுகவை விட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஏனெனில் திமுகவில் இருந்து அழகிரியை நீக்கிவிட்டனர். இவருக்கு ஜெயசுதா நெப்போலியன் என்ற மனைவியும், தனுஷ் நெப்போலியன் மற்றும் குனால் நெப்போலியன் என்ற மகன்களும் உள்ளனர். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.
ஏனெனில் அவருடைய மூத்த தனுஷ் நெப்போலியனுக்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளது. இதனால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர். இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் நெப்போலியன். தற்பொழுது நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .
நடிகர் நெப்போலியன் திருமணத்தில் மறைந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அவரது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். பலரும் பார்த்திடாத இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…