#image_title
குஷ்பூ மகாராஷ்டிரா மாநிலம் பம்பாயில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் நக்கத் தான் என்பதாகும். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தனது கேரியரை தொடங்கினார். 1980களின் இறுதியிலும் 90களிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்ற நடிகையாக வளர்ந்து வந்தவர் குஷ்பூ.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர். குஷ்பூ கிட்டத்தட்ட 185 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் குஷ்பூ. தனது நடிப்பிற்காக மூன்று தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள், இரண்டு சினிமா எக்ஸ்பிரஸ் விருது, ஒரு கலைமாமணி விருது, கேரள மாநில திரைப்பட விருது ஆகியவற்றை வென்றிருக்கிறார் குஷ்பூ.
1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பூ. அதற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றார் குஷ்பூ. ரிக்ஷா மாமா, சின்னத்தம்பி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாட்டாமை, மைக்கேல் மதன காமராஜன், அண்ணாமலை, சிங்காரவேலன் ஆகியவை இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கதவை ஆகும்.
இவர் இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் இருக்கிறார் அரசியல்வாதியாகவும் பணியாற்றி இருக்கிறார் குஷ்பூ. சமீபத்தில் ஒரு நேர்காணியில் கலந்து கொண்ட குஷ்பூ தனது முதல் சம்பளத்தை பற்றி கூறியிருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால் முதலில் நடிக்க வந்த போதெல்லாம் சம்பளம் வாங்குனது எங்க அப்பா தான். நான் என் கையால சம்பளம் வாங்கும் போது எனக்கு கிடைத்த சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். அது தெலுங்கு படத்தில் நடித்ததற்காக கொடுத்தாங்க. அப்பவே நான் அவ்வளவு ரூபாய் வாங்கி நடிச்சிருக்கேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் குஷ்பூ.
சிசந்தராபாத்தின் கத்ரிவாடா மொஹல்லாவைச் சேர்ந்த ரோஹித் என்பவரின் மகன்களான 7 வயது மாண்டி மற்றும் 5 வயது ஷாண்டி ஆகிய…
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகளை, உயிருடன் இருக்கும்போதே பெற்ற தந்தையே இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சிச் சம்பவம்…
லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 'மெராஜ் கஃபே' உரிமையாளர், பல வாலிபர்களை வரவழைத்து பத்திரிகையாளர் ஹசீப் அலி மீது கொடூரமான…
சங்காரெட்டி மாவட்டம், பட்டான்செரு மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரேசம் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெத்த கஞ்சர்லா கிராமம். இக்கிராமத்தில் உள்ள…
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…