ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றிக்குக் பிறகு மைதானத்தில் நடந்த சில நெகிழ்ச்சியான மற்றும் அழகான தருணங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ஆர்சிபி அணியின் வெற்றிக்குப் பின் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
அப்போது ஆர்சிபி அணியின் ஆல்-ரவுண்டர் குருணால் பாண்டியா தனது மகனை கைகளில் தூக்கிக் கொண்டு மைதானத்தில் உலா வந்தார். இந்த அழகான தருணத்தைக் கண்ட விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரால் சும்மா இருக்க முடியவில்லை. ஓடிச் சென்று குருணால் பாண்டியாவின் மகனைக் கட்டிப்பிடித்து, அவனது கன்னத்தைக் கிள்ளி கோலி கொஞ்சிய விடியோ ரசிகர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது. அருகில் நின்ற அனுஷ்கா சர்மாவும் அதை ரசித்து மகிழ்ந்தார்.
மறுபுறம், நீண்ட நாள் கனவான ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்ற உணர்ச்சிப் பெருக்கில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மைதானத்திலேயே ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்த இனிமையான ஜோடியின் பாசப் பிணைப்பு மற்றும் குருணால் பாண்டியாவின் மகனுடனான கோலியின் கியூட் வீடியோக்கள் தற்போது இணையத்தில் “ஸ்வீட் மொமண்ட்” ஆக வைரலாகி கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் இன்னும் சற்றுநேரத்தில் தவெக (TVK) கட்சியில்…
மேரிலாந்தில் தனது 3 வயதுப் பெண் குழந்தையைக் கொடூரமாக அடித்துக் கொன்று, சடலத்தைச் சூட்கேஸில் அடைத்து மறைத்த கொடூரத் தாய்,…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதை விட, தொடர் சர்ச்சைகளே அதிகம்…
திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில்,…
தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் நகர்வுகள், தேசிய அளவிலான உற்றுநோக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் காலியாக…
தமிழக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பெஞ்சமின் உள்ளிட்ட…