ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றிக்குக் பிறகு மைதானத்தில் நடந்த சில நெகிழ்ச்சியான மற்றும் அழகான தருணங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ஆர்சிபி அணியின் வெற்றிக்குப் பின் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
அப்போது ஆர்சிபி அணியின் ஆல்-ரவுண்டர் குருணால் பாண்டியா தனது மகனை கைகளில் தூக்கிக் கொண்டு மைதானத்தில் உலா வந்தார். இந்த அழகான தருணத்தைக் கண்ட விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரால் சும்மா இருக்க முடியவில்லை. ஓடிச் சென்று குருணால் பாண்டியாவின் மகனைக் கட்டிப்பிடித்து, அவனது கன்னத்தைக் கிள்ளி கோலி கொஞ்சிய விடியோ ரசிகர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது. அருகில் நின்ற அனுஷ்கா சர்மாவும் அதை ரசித்து மகிழ்ந்தார்.
மறுபுறம், நீண்ட நாள் கனவான ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்ற உணர்ச்சிப் பெருக்கில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மைதானத்திலேயே ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்த இனிமையான ஜோடியின் பாசப் பிணைப்பு மற்றும் குருணால் பாண்டியாவின் மகனுடனான கோலியின் கியூட் வீடியோக்கள் தற்போது இணையத்தில் “ஸ்வீட் மொமண்ட்” ஆக வைரலாகி கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
