தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும், பொங்கல் பரிசு போன்ற அரசு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வாங்க இயலாத 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருதி, அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ கடந்த ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசிலும் இத்திட்டம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ‘வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்’ தடையின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இதற்காகப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பான சேவை தற்போதைய அரசிலும் தடையின்றி நீடிக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் ஜூன் 2 மற்றும் ஜூன் 3 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, அண்ணாநகர், அடையாறு, தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் 18 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் மூலம் இந்த அத்தியாவசியப் பொருட்கள் பயனாளிகளின் வீடு தேடி விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…
தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…
திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…