Categories: சினிமா

சாலையில் வாட்டர் பாட்டில் விற்ற சிறுவனுக்கு.. மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

சாலையில் தண்ணீர் பாட்டில் விற்றுக் கொண்டிருந்த சிறுவனுக்கு கேபிஒய் பாலா செய்த உதவி தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் கேபிஒய் பாலா. அந்த நிகழ்ச்சி மூலமாக தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பின்னர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என்று ஆரம்பித்த இவர் பெரிய பெரிய மேடை நிகழ்ச்சிகளையும் விருது வழங்கும் விழாவையும் தொகுத்து வழங்க தொடங்கினார். சின்னத்திரை மூலமாக இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஜூங்கா, தும்பா, சிக்சர், புலிகுத்தி பாண்டி, லாபம், ஆன்ட்டி இந்தியன், நாய் சேகர், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

பெரிய பெரிய நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்வதற்கு யோசித்து வரும் நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை அப்படியே மற்றவர்களுக்கு உதவி செய்து வருகின்றார் கேபிஒய் பாலா. அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகள், ஆதரவற்ற பலருக்கும் கிராமத்தில் இருப்பவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவி செய்து வருகின்றார்.

தனது சொந்த செலவில் நான்கு ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்த இவர் ஒரு பெண்ணிற்கு ஆட்டோவும் வாங்கி கொடுத்தார். இப்படி பல உதவிகளை செய்து வரும் கேபிஒய் பாலா ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து மாற்றம் என்ற அறக்கட்டளையின் மூலமாகவும் ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் மற்றொரு சிறுவனுக்கும் உதவி செய்திருக்கின்றார்.

ரோடுகளிலும் பெட்ரோல் பங்கிலும் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்து வந்த சிறுவனை பார்த்த கேபிஒய் பாலா பள்ளிக்கு செல்வதில்லையா என்று கேட்டிருக்கின்றார். அதற்கு பதில் அளித்த சிறுவன் பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இது போன்று தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து வருவதாகவும் தனது வீட்டில் சில பணக்கஷ்டம் இருப்பதால் அதை சமாளிக்க இந்த வேலைகளை எல்லாம் செய்து வருவதாக கூறியிருந்தார். இதை கேட்டு கவலையான கேபிஒய் பாலா நேராக அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்க்கே சென்று பணத்தை கொடுத்து உதவி செய்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

7 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

7 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

7 மணத்தியாலங்கள் ago