#image_title
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர் சம்பாதித்த நற்பெயர்களுக்கு அளவே கிடையாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறி என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.
இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதனை எழுதியவர் வைரமுத்து. அதில் பாசம் உள்ள மனிதனப்பா இவன் மீசை வைத்த குழந்தையப்பா என்ற வரிகள் ரஜினிகாந்துக்கு மிகவும் பொருந்தும். இதனை ஒரு சந்தர்ப்பம் வைரமுத்துவுக்கு உணர்த்தியது. இந்நிலையில் பாபா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அடுத்த பாடலை எழுதுவதற்காக ரஜினிகாந்த் என்னை அழைத்தார். அவரை பார்ப்பதற்காக நான் ஓடிப் போனேன்.
அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவரது பார்வை எனது உடையிலும் எனது காலையும் பார்த்தவாறு இருந்தது. சிறிது நேரம் அவருடன் பேசி விட்டு நான் புறப்பட்டபோது ரஜினிகாந்த் கொஞ்சம் பொறுங்கள் என்று கூறினார். உங்களது உடைக்கு உங்களது காலணி கொஞ்சம் கூட பொருந்தவில்லை என கூறினார். மேலும் தனது உதவியாளரை ஒரு பேப்பரை எடுத்து வரச் சொல்லி எனது கால் அளவை எடுத்தார்.
பின்னர் புதிய காலனியை வாங்கி உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என ரஜினி கூறினார். அடுத்து ஏ. ஆர் ரகுமானின் ஒலிப்பதிவு கூடத்திற்கு சென்று அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு நான் வீடு திரும்பிய போது எனக்கான காலணி தயாராக எனது வீட்டில் காத்துக் கொண்டிருந்தது. இப்போது தான் பாசம் உள்ள மனிதனப்பா மீசை வைத்த குழந்தைப்பா என ரஜினி பற்றி நான் எழுதியது மிகவும் சரியான வரிகள் என்பது புரிந்தது என பத்திரிகை பேட்டியில் வைரமுத்து கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…