“1000 கோடி சொத்து.. சிறை தண்டனை”… இப்போது திடீர் பாசம்?…. சசிகலாவின் ‘ரீ-என்ட்ரி’யை கிழித்துத் தொங்கவிட்ட கே.பி. முனுசாமி….!

Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு ஓசூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பி. முனுசாமி, சசிகலாவின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, தான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறியவர் சசிகலா என்று குறிப்பிட்ட அவர், தற்போது வாக்குறுதியை மீறி மீண்டும் அரசியலுக்கு வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

சசிகலா குடும்பத்தினர் அதிமுகவின் ரத்தத்தை உறிஞ்சி, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக முனுசாமி குற்றம் சாட்டினார். தர்மம் தன் கடமையைச் செய்ததால்தான் அவர் சிறை செல்ல நேரிட்டது என்றும், அத்தகைய பின்னணி கொண்ட ஒரு குடும்பம் இன்று எடப்பாடி பழனிசாமி மீது பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் சாடினார். மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்காமல் சுயநலத்துடன் செயல்படுபவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை என்பதை அவர் தனது பேச்சின் மூலம் உறுதிப்படுத்தினார்.

சமீபத்தில் கமுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சசிகலா, எடப்பாடி பழனிசாமி தன்னை முதுகில் குத்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். சிறையில் இருந்தபோது தன்னைத் தமிழகத்திற்கு மாற்றச் சொன்னவர்களின் பேச்சைக் கேட்டிருந்தால், தான் இன்று உயிருடன் இருந்திருப்பேனா என்பதே சந்தேகம் என அவர் உருக்கமாகப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, முனுசாமி சசிகலாவின் கடந்த காலச் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

சசிகலா தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவம் பொறித்த கொடியை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதிமுக தலைமைக்கும் அவருக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. ஒருபுறம் சசிகலா தார்மீக உரிமையைக் கோர, மறுபுறம் அதிமுக நிர்வாகிகள் அவர் மீதான ஊழல் புகார்களையும் பழைய கடிதங்களையும் முன்வைத்து முறியடிக்க முயன்று வருகின்றனர். இந்த அரசியல் மோதல் வரும் நாட்களில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

4 minutes ago

அடச்சீ… இன்சூரன்ஸ் ரூ.44 லட்சத்திற்கு ஆசைப்பட்டு… மனைவியை காரை ஏற்றி கொன்ற கணவன்… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…

12 minutes ago

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

25 minutes ago

ஐயோ பாவம்… சுரங்கப்பாதையில் நொறுங்கிய SUV கார்… கதறித் துடித்த பயணிகள்… காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…

53 minutes ago