முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி இதனை கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ்-ஸின் இந்த முடிவை “வெட்கக்கேடான செயல்” என்று குறிப்பிட்ட அவர், இது கொள்கை பிடிப்பற்ற ஒரு அரசியல் நகர்வு எனச் சாடியுள்ளார்.
அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்த ஒரு நபர், இன்று அதே கட்சிக்கு எதிர் துருவமாக இருக்கும் திமுகவில் ஐக்கியமாகி இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய கே.பி. முனுசாமி, “ஓபிஎஸ் சுயநலத்தின் மொத்த உருவமாகத் திகழ்கிறார்; தனக்கு வாழ்வளித்த இயக்கத்தை மறந்து, தனது அரசியல் லாபத்திற்காகத் தீய சக்தியாகத் தான் கருதிய திமுகவில் இணைந்துள்ளார்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய விரும்பியிருந்தால், கட்சியின் பொதுச்செயலாளரிடம் மன்னிப்புக் கடிதம் வழங்கி முறைப்படி இணைந்திருக்க வேண்டும் என்றும், அதை விடுத்து கட்சிக்குத் துரோகம் இழைக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். தென் மாவட்டங்களில் அதிமுக இன்னும் வலிமையாகவே இருப்பதாகவும், ஓபிஎஸ்-ஸின் இந்த விலகல் அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஓபிஎஸ்-ஸின் இந்த மாற்றம் தென் மாவட்டங்களின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஒரு தரப்பினர் கருதினாலும், கே.பி. முனுசாமி போன்ற அதிமுக தலைவர்கள் இதனை ஒரு சந்தர்ப்பவாத அரசியலாகவே பார்க்கின்றனர். ஓபிஎஸ்-ஸின் இந்த முடிவு அவரது அரசியல் வாழ்வின் கசப்பான அத்தியாயம் என்றும், தொண்டர்கள் இதனை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…
ஒடிசா மாநிலத்தில் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால், 73 வயது முதியவர் ஒருவர் உடைந்த காலோடு 150 கிலோமீட்டர் தூரம்…
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி…
வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…