Categories: சினிமா

அவர் படத்துல உனக்கென்ன வேலை?… போன் போட்டு செந்திலைக் கலாய்த்த கவுண்டமணி – எஞ்சாய் பண்ணி சொன்ன ரஜினி!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.

கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம்.

செந்தில் கவுண்டமணி அண்ணனுக்கு கொடுப்பதில் பாதியை எனக்குக் கொடுங்கள் என வாங்கிக் கொள்வாராம். இப்படி 25 வருடங்களுக்கு மேலாக இணைந்திருந்த அவர்கள் கடைசி 15 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து நடிக்கவில்லை. அதன் பின்னர் தனித்தனியாக படங்களில் நடித்தாலும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் கவுண்டமணி செந்தில் நட்பைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நானும் செந்திலும் வீரா படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது செந்திலுக்கு கவுண்டமணியிடம் இருந்து போன் வந்தது. அவர் செந்திலிடம் “எங்கடா இருக்க?” என்றார். செந்தில் “அண்ண ரஜினிகாந்த் பட ஷூட்டிங்” என்றார். அதைக் கேட்டு கவுண்டமணி “அவரு படத்துல நீ என்னப் பண்ற?.. அவரே எல்லாக் காமெடியையும் பண்ணிடுவார்” எனக் கூறினார். இதைக் கேட்டு நான் விழுந்து விழுந்து சிரித்தேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“ஆளுநருக்காக நாங்க ஏன் காக்கணும்..?” பிரசவ வலி மனைவியுடன் டிராஃபிக்கில் சிக்கிய கணவனின் ஆவேசக் கேள்வி…! நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு..!

ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…

1 minute ago

பாஜகவில் விரிசல்..? அண்ணாமலையின் புதிய கட்சி திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் நபர் யார்..? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் கூட்டணி…!!

பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…

3 minutes ago

ஒடிசாவில் அதிர்ச்சி.. காதலை நிராகரித்த பெண்.. ஆபீஸின் லேடிஸ் டாய்லெட்டில் ஸ்பை கேமரா வைத்த அதிகாரி கைது…!

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…

23 minutes ago

“என் மனைவி கர்ப்பிணி..!” ஆளுநர் வருகைக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. நடுச்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கணவன்.. பெங்களூருவில் பரபரப்பு…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…

33 minutes ago

தோசை பார்சல் வாங்க வந்தவர் கொடுத்த பகீர்.. கண்ணில் மிளகாய் பொடியை தூவி நடந்த கொடூரம்… கதறிய ஹோட்டல் உரிமையாளர்..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…

37 minutes ago

BIG BREAKING: அண்ணாமலை விலகல்..? பாஜகவில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…

42 minutes ago