மாலத்தீவு நாட்டில் தலைவர் மாலேவில் நடந்த 7வது உலகக் கோப்பை கேரம் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனா மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் என்ற பிரிவிலும் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார். டீம் பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்துள்ளார். கீர்த்தனா மொத்தம் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் சென்னை திரும்பிய கீர்த்தனா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனது அம்மா ரொம்பவும் கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார்கள். நகை எல்லாம் அடகு வைத்து கேரம் போட்டியில் விளையாட எனக்கு பணம் கொடுத்துள்ளார்.
ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் அம்மா என்னை இந்த நிலைக்கு வர உருவாக்கினார். எங்கள் வீட்டில் எல்லோருமே கஷ்டப்படுகிறோம். எங்கள் வீட்டில் படுக்க கூட இடம் இருக்காது. இப்போது நான் பெற்று வந்த வெற்றி கோப்பையை கூட வீட்டில் வைக்க இடம் இருக்காது. அதனால் நான் போட்டியில் வாங்கிய பாதி வெற்றிக்கோப்பைகள் கேரம் கிளப்பில் தான் இருக்கும். எங்கள் வீட்டில் அதை வைக்ககூட இடவசதி இல்லை. எனவே எனக்கு வேலையும் சொந்தமாக வீடு கட்டவும் உதவுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கேரம் சாம்பியன் கீர்த்தனா கூறியிருக்கிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…