இந்திய திரைப்பட உலகம் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தைப் பார்த்த சிறுமியின் எதிர்பாராத செயல் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில், திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென்று படம் முடிந்ததும் கத்தி நடுக்கத்துடன் நடந்து கொண்டார். திரைப்படத்தின் ஆழமான புராண காட்சிகள் மற்றும் தீவிரமான பக்தி உணர்வுகள் சிறுமியை மன அழுத்தத்திற்குள் எடுத்ததாக பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அந்த சிறுமியை அமைதி படுத்த முயன்ற பார்வையாளர்களும் குடும்பத்தினரும் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
திரையரங்கில் சிறுமி தொடர்ந்து சத்தமிட்டு பதட்டத்தில் நடுங்கியதால் உடனடியாக அவரை திரையரங்கில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து காந்தாரா படத்தின் தாக்கம் குறித்த விவாதம் தீவிரமாக எழுந்துள்ளது. இந்த படம் மிகுந்த ஆன்மீக தாக்கம் கொண்டது என்று ஒரு சிலர் கூறி வருகிறார்கள். திரைப்படம் ஒரு கலை வடிவமாக இருந்தாலும் அதன் தாக்கம் மனதையும் உணர்வுகளையும் எவ்வளவு ஆழமாக தொடுகிறது என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளதாக பலரும் கூறும் நிலையில் சினிமா உலகிலும் இது புதிய பார்வையை உருவாக்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…
தமிழக அரசியலில் "குதிரை பேர" விவகாரம் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக்…
தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள், சமீபத்தில் தனது 73ஆவது…
அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் தற்போது சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களில்…