#image_title
தமிழ் திரையுலகில் அர்ப்பணிப்பு உணர்வுக்கு பெயர்பெற்ற நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் எந்த துறையாக இருப்பினும் தன்னுடைய திறமையை அதில் வெளிகாட்டி விடுவார் நடிகர் கமல். அதே போல எந்தவொரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் பயன்படுத்தி பரிசோதிக்கும் நபராக கமல்தான் இருப்பார்.
இதனால்தான் தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
இந்நிலையில் 100 படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் அதிகமாக படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு நிறைய பரிசோதனை முயற்சி படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி 1989 ஆம் ஆண்டு அவர் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம்தான் அபூர்வ சகோதரர்கள்.
வழக்கமான தந்தையைக் கொன்ற வில்லன்களை மகன்கள் பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதில் ஒரு கதாபாத்திரத்தை குள்ளமான மனிதனாகக் காட்டி வித்தியாசம் காட்டியிருப்பார். அந்த படத்துக்காக அப்போதே பெரிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே கஷ்டப்பட்டு நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படம் பல ஆண்டுகள் கழித்து பேசிய கமல்ஹாசன் “முதலில அபூர்வ சகோதரர்கள் படத்தை குழந்தைகளுக்கான படமாகதான் எடுக்க நினைத்தோம். ஆனால் அதில் அதன் பிறகு காதல் காட்சிகள் இடம்பெற்றன. பின்னர் வாழவைக்கும் காதலுக்கு ஜே என்ற பாடல் இடம்பெற்றது. இதெல்லாம் குழந்தைகளுக்கு தேவையில்லாதது. அதனால் அந்த படத்தின் தொனியே மாறிவிட்டது” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…
உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க - ஈரான் இடையிலான போர்…
பிரிட்டனின் வால்சால் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பர்மிங்காம்…
மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…