தமிழ் சினிமாவில் கிளாசிக் இசையமைப்பாளர்களான வேதா, எம்.எஸ்.வி ஆகியோரின் வரிசையில் இடம்பெற்றவர் டி.ஆர்.பாப்பா. 1922 ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் பிறந்த இவரது உண்மையான பெயர் சிவசங்கரன்.
1952 ஆம் ஆண்டு ஜோசஃப் தெலியத் இயக்கிய “ஆத்மசாந்தி” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.ஆர்.பாப்பா. அதனை தொடர்ந்து பல சினிமா கம்பெனிகள் தயாரித்த வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
“இரவும் வரும் பகலும் வரும்”, “ஒன்னுமே புரியல உலகத்துல” போன்ற காலத்தால் நிற்கும் பல பாடல்களுக்கு இசையமைத்தவர் டி.ஆர்.பாப்பா. இவ்வாறு அக்காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளராக திகழ்ந்தவர் இவர்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், கலைஞர் மற்றும் டி.ஆர்.பாப்பா ஆகியோரை குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது கலைஞர் எழுதிய பல பாடல்களுக்கு டி.ஆர்.பாப்பா இசையமைத்துள்ளாராம். கலைஞரை பொறுத்தவரை அவர் பாடல் எழுதி கொடுத்தவுடனே அந்த பாடலுக்கு மெட்டமைக்க வேண்டும் என விரும்புவாராம். ஆனால் டி.ஆர்.பாப்பா எப்போதுமே ஒரு பாடலுக்கு மெட்டமைக்கும்போது அந்த பாடலை நன்றாக படித்து புரிந்துகொண்டு அதன் பின்புதான் மெட்டமைப்பாராம்.
ஆனால் கலைஞர் அதுவரை காத்திருக்கமாட்டாராம். அவரது வற்புறுத்தலின் பெயரில் பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறாராம் டி.ஆர்.பாப்பா. பாடல் வரிகளில் சில வார்த்தைகள் நெருடலாக இருந்தாலும் உடனே மாற்றிக்கொடுப்பாராம் கலைஞர். இவ்வாறு டி.ஆர்.பாப்பா, கலைஞருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறாராம்.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…