தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான குடும்பத் தலைவிகள் பயனடைத்து வருகின்றனர். முதலில் இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகள் பலருக்கும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாத நிலையில் புகார் எழுந்தது. பிறகு அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைத்து வருகிறது. தற்போது தகுதியுள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தோறும் பணம் வழங்கப்பட்டு வருகின்றது.
இப்படியான நிலையில் குடும்ப தலைவிகளுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் சில குடும்பத் தலைவிகளின் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்களின் பெயர் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்படும். திருமணம் ஆகாத மகன் அல்லது மகள் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணிகளில் சேர்ந்திருந்தால் அந்த குடும்பத்தை சேர்ந்த குடும்பத்தலைவி இந்த திட்டத்தில் இனி பயனாளியாக இருக்க முடியாது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற திருமணமான பெண்களும் இந்த திட்டத்தில் பயனாளியாக இருந்தால் அவர்களின் பெயர் நீக்கப்படும். அந்த வகையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…