தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான குடும்பத் தலைவிகள் பயனடைத்து வருகின்றனர். முதலில் இந்த திட்டத்தில் குடும்பத் தலைவிகள் பலருக்கும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாத நிலையில் புகார் எழுந்தது. பிறகு அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைத்து வருகிறது. தற்போது தகுதியுள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தோறும் பணம் வழங்கப்பட்டு வருகின்றது.
இப்படியான நிலையில் குடும்ப தலைவிகளுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் சில குடும்பத் தலைவிகளின் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் குடும்பங்களை சேர்ந்த பெண்களின் பெயர் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்படும். திருமணம் ஆகாத மகன் அல்லது மகள் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணிகளில் சேர்ந்திருந்தால் அந்த குடும்பத்தை சேர்ந்த குடும்பத்தலைவி இந்த திட்டத்தில் இனி பயனாளியாக இருக்க முடியாது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற திருமணமான பெண்களும் இந்த திட்டத்தில் பயனாளியாக இருந்தால் அவர்களின் பெயர் நீக்கப்படும். அந்த வகையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
