திருமணமான பத்தே நாட்களில், தனது காதலனுடன் ஹோட்டலுக்குச் சென்ற பெண் ஒருவர், 11-வது நாள் தனது கணவரைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திலீப் யாதவ் என்ற அந்த நபர், திருமணமான சில நாட்களிலேயே மர்மமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் அவரது மனைவியே இந்தக் கொலையைத் திட்டமிட்டது தெரியவந்தது.
போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த அந்தப் பெண், தனது கணவரால் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி அளிக்க முடியவில்லை என்றும், தனது காதலன் மட்டுமே உடல் ரீதியாக வலிமையானவர் என்பதால் அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த அவர், திருமணத்தின் போது ‘முகத்தைக் காட்டுவதற்காக’ (Mu-dikhayi) உறவினர்கள் பரிசாக வழங்கிய பணம் மற்றும் நகைகளை விற்று கூலிப்படைக்கு முன்பணம் கொடுத்துள்ளார்.
திட்டமிட்டபடி, அந்தப் பெண் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் திலீப் யாதவை வழிமறித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவர் மயக்கமடைந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். தற்போது அந்தப் பெண்ணையும், கொலையில் சம்பந்தப்பட்ட கூலிப்படையினரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…