உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி நகர் பகுதியில் நடந்த ஒரு பயங்கர விபத்து குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையை கடக்க முயன்ற ஸ்கூட்டருடன் நேருக்கு நேர் மோதிய கொடூர மோதல் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. கார் ஓட்டுநர் மற்றொரு இரு சக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த ஸ்கூட்டருடன் மோதி விபத்து நேர்ந்ததால் ஹெல்மெட் அணிந்திருந்த இருவரும் பல அடிகள் தூரம் காற்றில் வீசப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த விபத்துக்கு பிறகு கார் ஓட்டுநர் நின்று உதவி செய்யாமல் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டார். அருகில் இருந்த மக்கள் உடனடியாக ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய வாகனத்தையும் ஓட்டுனரையும் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் கடந்த வாரம் நடந்த கார் வெடி விபத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதனை…
வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குளிர்பான டீலர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கடன் வாங்கியவர் ஜாதியை சொல்லி பொதுவெளியில்…
பிரபல பின்னணிப் பாடகர் மனோ, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 26,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பாஜக உடன்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி என்ற கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு 30…