Categories: சினிமா

அந்த படத்தை பார்த்ததும்… விஜய் சேதுபதிக்கு போன் போட்டு உங்க கூட நடிக்கணும்னு சொன்ன மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி…!

Spread the love

பிரபல நடிகரான விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சிறிய சிறிய வேடங்களில் நடித்து பல அவமானங்களை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்ற கொள்கை இல்லாமல் கதைக்கு தேவை என்றால் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார். ஒரு பக்கம் ஹீரோவாகவும் மறுபக்கம் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி ஹீரோவாக தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். தனது ஐம்பதாவது படமாக மகாராஜா படத்தில் நடித்த விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

போடா போடி படத்திற்கு பிறகு சில ஆண்டு இடைவெளி விட்டு விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைப்படம் தான் நானும் ரவுடிதான். முதலில் படத்தில் நடிக்க பல நடிகர்களை அணுகிய விக்னேஷ் சிவன் கடைசியாக விஜய் சேதுபதிக்கு இந்த கதையை கூறி அவரை நடிக்க வைத்தார். மேலும் இப் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இதில் நயன்தாரா காத்து கேளாத காதம்பரியாக நடித்திருப்பார். இந்த படம் பலருக்கு பிடித்த ஒரு படமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

அந்தவகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தை பார்த்துவிட்டு அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இதில் விஜய் சேதுபதியின் நடிப்பு அவ்வளவு அருமையாக இருந்ததாகவும் 100 முறை இந்த படத்தை பார்த்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை பார்த்த பிறகு விஜய் சேதுபதிக்கு போன் செய்து இந்த படம் குறித்து பாராட்டிவிட்டு பின்னர்  உங்களுடன் நடிக்க வேண்டும் என்று கூறியதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Soundarya

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

11 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

23 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

30 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

38 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

45 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

52 minutes ago