#image_title
சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகினி வித்யாவை முத்துவின் போனை கொண்டு கடலில் கொண்டு போட்டுவிட்டு வருமாறு கூறுகிறாள். மீனாவை பாலோ செய்து ஒரு நபர் வந்து கொண்டிருக்கிறார். அதை கண்டு மீனா பயப்படுகிறாள். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் மனோஜூம் ரோகினியும் ஷோரூமில் இருக்கின்றனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் பையன் இதை நான் காலையில் கடை திறக்கும்போது எடுத்தேன் என்று மனோஜிடம் கூறுகிறார். மனோஜ் அதை திறந்து பார்க்கும் போது அதில் முட்டைகளாக இருந்தது. அப்போது இன்னொரு வேலை செய்யும் ஒரு பையன் அங்கு வந்து சார் இது செய்வினை செய்த முட்டை சார் இதனால நமக்கு பிசினஸ் லாஸ் ஆக போகுது என்று கூறுகிறான்.
மேலும் தன் வீட்டில் நடந்த சம்பவத்தையும் கூறுகிறான். நாங்க பிசினஸ் வச்சி முட்டை எடுத்த உடனே எங்க பிசினஸ் லாஸ் ஆயிடுச்சு என்ற உடனே மனோஜ் பயப்படுகிறான். மனோஜின் பிரண்டு கடைக்கு வரும்போது இது உடனே நம்ம செய்வினை எடுத்து ஆகணும் ஜோசியர்கிட்ட போகலாம் என்று மனோஜியையும் ரோஹிணியையும் கூட்டிக்கொண்டு செல்கின்றனர். ரோகிணி இதில் நம்பிக்கை இல்லை என்று தான் கூறிக்கொண்டு செல்கிறாள்.
அங்கு ஜோசியர் இது செய்வினை தான் வச்சிருக்காங்க நீங்க ஒன்னும் இல்லாம ஆக போறீங்க தாரமட்டமாக போறீங்க இதுக்கு பரிகாரம் பண்ணனும் அப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்து மீனா பூக்கட்டும் இடத்திற்கு அந்த பையன் பாலோ செய்து வந்து தொந்தரவு செய்கிறான்.
அடுத்ததாக வித்யா கையில் முத்து ஃபோனை வைத்து தான் சுத்திக் கொண்டே இருக்கிறாள். அப்போது அவர் நடந்து வரும்போது செருப்பு அத்து விடுகிறது. அப்போது முத்தும் மீனாவும் வழக்கமாக வரும் தாத்தா பாட்டியிடம் செருப்பை தைத்துக் கொள்கிறாள். ஆட்டோ ஏறும்போது போனை விட்டுவிட்டு சென்றாலும் அந்த போனை முத்து மீனா பழகும் அந்த செருப்பு தைக்கும் பாட்டி தாத்தா எடுத்து வைத்து இருக்கின்றனர். அப்போது வித்யா ஐயோ போன தொலைச்சிட்டோமே என்ன செய்வது என்று யோசிக்கும்போது ரோகினி போன் செய்கிறார். ரோகினிடம் நான் போனை கடலில் போட்டு விட்டேன் என்று பொய் சொல்லிவிட்டார் வித்யா. இனி இந்த போன் முத்துவின் கையில் கிடைத்தால் ரோகினி மாட்ட வாய்ப்பு இருக்கிறது இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…