Categories: இந்தியா

“உல்லாச ஆசை காட்டி அழைப்பு” அழகியின் பேச்சால் மயங்கிய தொழிலதிபர்… குளியலறைக்கு சென்றுவிட்டு பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி… பகீர் கிளப்பும் ஹனி டிராப் சம்பவம்..!!!

Spread the love

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு, சமூக வலைதளத்தின் வாயிலாக அறிமுகமான தீபா அவடகி (33) என்ற பெண், ஆசை வார்த்தைகளை கூறி அவரை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார். அங்கு தொழிலதிபர் குளிக்கச் சென்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட தீபா, அவர் வைத்திருந்த நகை, பணம் மற்றும் செல்போனைத் திருடிக்கொண்டு தப்பியோடினார். இதுமட்டுமன்றி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த தொழிலதிபரை மிரட்டி மேலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், திலக்வாடி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர். குற்றவாளியைப் பிடிக்கத் திட்டமிட்ட போலீசார், ஒரு நபரைத் தயார் செய்து தீபாவிடம் பேச வைத்தனர். போலீசாரின் விரிப்பில் சிக்கிய தீபா, மீண்டும் ஒரு ஹோட்டலுக்கு வந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். விசாரணையில் அவர் பாகல்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் என்பதும், ஆடம்பர வாழ்க்கைக்காக இந்தத் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட தீபாவிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது காதலன் சிவானந்த் என்பவருடன் சேர்ந்து பல தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இதே பாணியில் ஏமாற்றி வந்தது அம்பலமானது. இவர்கள் இருவரும் திட்டமிட்டு வசதி படைத்தவர்களைக் குறிவைத்துத் திருடுவதையும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சொகுசாக வாழ்ந்து வந்ததையும் ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து 2 கார்கள் மற்றும் 11 செல்போன்கள் உள்ளிட்ட சுமார் 32.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது தீபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது காதலன் சிவானந்த் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

4 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

4 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

4 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

5 மணத்தியாலங்கள் ago