“உன் புருஷன் போட்டோ எதுக்கு ஸ்டோரி போட்ட”…. மனைவியை காரில் கடத்திய காதலன்…. காரில் நடந்த கொடூரம்…. சென்னையை உலுக்கிய சம்பவம்…!

Spread the love

சென்னை தாம்பரம் அடுத்த மேடவாக்கம் சின்மயா நகரைச் சேர்ந்த 36 வயது பெண் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் பள்ளி முதல்வராக பணியாற்றி வரும் இவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் வாயிலாக மேடவாக்கம் பெல் நகரைச் சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ஹரிகிருஷ்ணன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பிய ஹரிகிருஷ்ணனுடன், ஷாலினி நண்பராகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஷாலினி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன், தொலைபேசி வாயிலாக ஷாலினியைத் தொடர்பு கொண்டு, அந்தப் புகைப்படத்தை உடனடியாக நீக்குமாறு கூறி ஆபாசமாகத் திட்டியுள்ளார். “என் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வைப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என ஷாலினி தட்டிக் கேட்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தொலைபேசியுடன் நிற்காமல், நேரில் வன்முறையாக வெடித்துள்ளது.

வெறி கொண்ட ஹரிகிருஷ்ணன், ஷாலினியின் வீட்டிற்கே சென்று அவரிடம் பேச வேண்டும் எனக் கூறி வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏற்றியுள்ளார். கார் கிளம்பிய சிறிது நேரத்திலேயே ஷாலினியின் கழுத்தை நெரித்து, முகத்தில் தாக்கிய ஹரிகிருஷ்ணன், அவருக்குப் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய ஷாலினி அலறவே, சத்தம் கேட்டு அவரது தந்தை ஓடி வருவதைக் கண்ட ஹரிகிருஷ்ணன், அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து ஷாலினி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணனை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமூக வலைதள நட்பு எல்லை மீறி வன்முறையில் முடிந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அடுத்தடுத்து 10 பேர் மரணம்… அமெரிக்காவை மிரட்டும் ‘சைலண்ட் கில்லர்ஸ்’ – பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

அமெரிக்காவின் உயரிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்றும் முன்னணி விஞ்ஞானிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதும், மாயமாவதுமான சம்பவங்கள்…

41 seconds ago

“8% -ஆ அல்லது 25% -ஆ?”… ஸ்டாலினுக்கு செக் வைத்த விஜய்… எடப்பாடியின் தூக்கத்தைக் கெடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்…!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த…

3 minutes ago

பகீர்..! சிறுவன் தலையைச் சுவரில் ஓங்கி அடித்து கொலை… குருகுலத்தில் நடந்த கொடூரம்… காதலியுடன் சேர்ந்து உரிமையாளர் செய்த பகீர் காரியம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…

52 minutes ago

அடப்பாவி..! முதலிரவில் மனைவியை விரட்டிவிட்டு… தாயுடன் தூங்க அடம் பிடித்த மகன்… மருமகள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…

1 மணத்தியாலம் ago

நெகிழ்ச்சி..! மரணத்திற்குப் பின்னும் தொடரும் அண்ணன்-தங்கை உறவு.. சகோதரியின் எலும்பில் செய்த ‘மணி’ ஓசை… சாம்பலில் பூக்கும் செடிகள்.. காற்றில் அசையும்போது அவள் குரல் கேட்கும்..!!

தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…

1 மணத்தியாலம் ago

பக்தர்கள் கோமியத்தைக் குடிப்பது கட்டாயமா..? கங்கோத்ரி கோயில் பெயரில் பரவும் அதிரடி வதந்தி.. பின்னணியில் இருக்கும் உண்மை என்ன..?

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…

1 மணத்தியாலம் ago