Categories: சினிமா

ராமராஜனை கல்யாணம் செஞ்சப்போ, எங்க வீட்லயே என்னை கொல்ல பார்த்தாங்க.. சினிமாவை மிஞ்சிய நடிகை நளினியின் மறுபக்கம்..

Spread the love

நடிகை நளினி, 1980களில் தமிழ் சினிமாவில் இவரை போல எந்த நடிகையும் பிஸியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பல முன்னணி ஹீரோக்களுக்கு நளினிதான் கதாநாயகி. அவரது சர்வலட்சணமாக முகமும், அழகிய தோற்றமும், உயரமும், நவரசத்தை வெளிப்படுத்தும் முகபாவமும் அவர் பல படங்களில் நடிக்க வாய்ப்பாக அமைந்தது. உதவி இயக்குநராக இந்த ராமராஜனை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றுவந்தேன் என்று சென்டிமென்டாக குங்குமத்தை நெற்றியில் வைத்துவிட்டு,. காதல் கடிதங்கள் கொடுத்து நளினியை காதலித்து மணந்தவர் நடிகர் ராமராஜன். ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நளினி கூறியதாவது, நான் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், நான் நடித்த 24 படங்களுக்கு உதவி இயக்குநராக ராமராஜன் பணிபுரிந்தார். அப்போது ஹீரோயின் அணிந்துள்ள புடவை, நெற்றியில் உள்ள பொட்டு உள்ளிட்ட விஷயங்களை உதவி இயக்குநர்தான் குறிப்பெடுத்து எழுதி வைக்க வேண்டும். அப்படி என்னை பார்த்து, பார்த்தே அவருக்கு என் மீது காதல் வந்துவிட்டது. காதல் கடிதங்களாக கொடுத்துக்கொண்டிருந்த அவரை, வீட்டுக்கு பெண் பார்க்க வரச் சொன்னேன்.

அவர் எஸ்எஸ் சந்திரன், சினிமா தயாரிப்பாளர் ராம நாராயணன் போன்றவர்களை அழைத்து வந்ததால், என் அம்மா சத்தமிட்டார். என் மகளுக்கு திருமணமே செய்து வைக்க மாட்டேன் என்றார். அப்போதுதான், இப்படியே நடிகையாகவே இருந்துவிட வேண்டுமா, எனக்கு திருமணமே செய்துவைக்க மாட்டார்களோ என தோன்றியது.

தமிழ் படங்களில் நடிக்க விடாமல், அடுத்த ஒரு வருடம் மலையாள படங்களில் மட்டுமே நடித்தேன். அதன்பிறகுதான், இருவரும் வீட்டுக்கு தெரியாமல் சென்று திருமணம் செய்துக்கொண்டோம். சென்னைக்குள் ஒரு மாதமாக நாங்கள் இருவருமே வராமல் ஒளிந்துக்கொண்டோம்.

தெரிந்தால், எங்க வீட்லயே என்னை கொல்ல பார்ப்பார்கள் என தெரிந்தது. இதையறிந்துக்கொண்ட புரட்சி தலைவர் எம்ஜிஆர் எங்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து சாப்பிட வைத்தார். பயந்து பயந்து வாழக்கூடாது என தைரியம் கொடுத்தார். உட்லண்ட் ஓட்டலில் அவரே பணம் கட்டி, எங்கள் கல்யாண ரிஷப்சனை நடத்தி வைத்தார். அந்த ரிசப்ஷனில் வந்து அவரே கலந்துக்கொண்டு எங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டுச் சென்றார் என, கூறியிருக்கிறார் நடிகை நளினி ராமராஜன்.

admin

Recent Posts

“என்னம்மா இது…?” ஹனிமூன் பயணம்… ரயிலில் புதிய நபருடன் நெருக்கமான காதல் மனைவி…! ஷாக்கான கணவர்… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சம்பவம்…!!

டார்ஜிலிங்கைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது…

1 minute ago

அரசுப் பள்ளியா?… தனியார் பள்ளியா?… கடனாளியாகி மகனைப் படிக்க வைக்கும்… நடுத்தரக் குடும்பங்களின் அதிர்ச்சி முகங்கள்…!!

அரசுப் பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என்ற குழப்பம் பல நடுத்தரக் குடும்பங்களை வாட்டும் ஒரு பொதுவான கேள்வி. உங்கள்…

7 minutes ago

விஐபி போனாதான் ரோடு போகுமா?… உழைக்கும் மனிதனின் உயிருக்கு விலையே இல்லையா?… மிதிவண்டி ஓட்டுநரைத் தள்ளிவிட்ட காவலர்… வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

மும்பையில் விஐபி வாகனம் செல்லும் போது போக்குவரத்து காவலர்களால் மிதிவண்டி ஓட்டுநர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அவமரியாதை குறித்து சிவசேனா…

8 minutes ago

உயிருடன் வந்த மனைவி… கட்டிப்பிடித்து அழுத கணவர்… குழந்தைகளை காணோமே… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு, பல நாட்களாகக் காணாமல் போன மனைவி உயிருடன் மீண்டு வந்து கணவரிடம்…

8 minutes ago

ஐயோ கொடுமையே… காதலியுடன் லுடோ விளையாடிய… பாஜக இளைஞர் தலைவர் படுகொலை… கணவனுடன் சேர்ந்து மனைவி செய்த அதிர்ச்சி காரியம்… பதறவைக்கும் சம்பவம்…!

சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…

27 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… போதையில் மனைவியைக் குத்திக்கொன்றுவிட்டு… கால் தவறி விழுந்துவிட்டார் என்று நாடகமாடிய கணவன்… கொளத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…

32 minutes ago