“இதய வால்வை தலைகீழாகப் பொருத்திய கொடூரம்” 13 வயது சிறுமியின் உயிரோடு விளையாடிய இந்திய வம்சாவளி டாக்டர்… ₹140 கோடி நஷ்டஈடு கேட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் மெகா வழக்கு..!!

Spread the love

அமெரிக்காவின் ஓரிகான் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அசோக் முரளிதரன் மீது 17 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு 13 வயது சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆகஸ்ட் 15, 2025 அன்று நடைபெற்ற திறந்த இதய அறுவை சிகிச்சையின் போது, சிறுமியின் இதய வால்வை தலைகீழாகப் பொருத்தியதாக மருத்துவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தவறால் அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுமியின் இதயம் செயல்படாமல் போனதுடன், அவர் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த தவறான சிகிச்சைக்குப் பிறகு, சிறுமி ஓரிகான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நெஞ்சுப் பகுதி திறக்கப்பட்ட நிலையிலேயே பல நாட்கள் உயிா்காக்கும் எக்மோ கருவியின் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். அங்குள்ள மருத்துவர்கள் முறையான விளக்கம் அளிக்காமல், சிறுமி இறக்கும் தருவாயில் இருப்பதாகக் கூறி உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி பெற்றோரிடம் பேசியுள்ளனர். எனினும், பெற்றோர்கள் தங்கள் மகளை சியாட்டில் குழந்தைகள் மருத்துவமனைக்கு விமானம் மூலம் மாற்றினர். அங்குள்ள மருத்துவர்கள் சிறுமிக்கு வால்வு தலைகீழாகப் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்த உடனே அவரது இதயம் மீண்டும் சாதாரணமாகச் செயல்படத் தொடங்கியது.

தற்போது சிறுமி குணமடைந்து வரும் நிலையில், இந்த மருத்துவ அலட்சியத்தால் அவர்களின் மருத்துவக் கட்டணம் மட்டும் 3.35 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் அசோக் முரளிதரன், இந்தியாவின் சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றவர் என்பதும், ஸ்டான்போர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் உயர் பயிற்சி பெற்ற புகழ்பெற்ற குழந்தை இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக ஓரிகான் மருத்துவமனை நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Swetha

Recent Posts

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

6 minutes ago

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

16 minutes ago

ரேஷன் கார்டு இனி ATM கார்டு போல மாறப்போகுது… ரேஷன் கடையில இந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…

23 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

29 minutes ago

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

40 minutes ago

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

51 minutes ago